Sunday, June 13, 2021

பாகம்-9

இப்பகுதியில்காலந்தவறிய குறை நீங்க மீண்டும் ஒரு அர்க்யம்என்னும் ப்ராயச்சித்தார்க்யம் பற்றிப் பார்க்கலாம்.

ப்ராயச்சித்தார்க்யம் ||9||

ப்ராணாயாம: ||

ஓம் பூ: | ஓம் புவ: | ஓகும் ஸுவ: | ஓம் மஹ: | ஓம் ஜந: | ஓம் தப: | ஓகும் ஸத்யம் ||

ஓம் தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி| தியோ யோ ந: ப்ரசோதயாத் ||

ஓமாபோ ஜ்யோதீ ரஸோம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவ-ரோம் ||

ஓம் பூர்ப்புவஸ்ஸுவதத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி| தியோ யோ ந: ப்ரசோதயாத் || (அர்க்யம்)

ப்ராயச்சித்தார்க்யம் (காலந்தவறிய குறை நீங்க மீண்டும் ஒரு அர்க்யம்) :

ப்ராணாயாமம்: (ஓம் பூ:) ஓம்காரமே பூலோகம்; (ஓம் புவ: ) ஓம்காரமே புவர்லோகம்;  (ஓகும் ஸுவ: ) ஓம்காரமே ஸுவர்லோகம்; (ஓம் மஹ: ) ஓம்காரமே மஹர்லோகம்; (ஓம் ஜந: ) ஓம்காரமே ஜநலோகம்; (ஓம் தப: ) ஓம்காரமே தபோலோகம்; (ஓகும் ஸத்யம்) ஓம்காரமே ஸத்யலோகம்

(ஓம்) ஓம்காரப் பொருளான, (: ) எந்த பரமாத்மா (: ) நம்முடைய (திய: ) புத்தி மற்றும் சக்திகளை (ப்ரசோதயாத்) தூண்டுகிறாரோ, (தத்) அந்த (ஸவிது) அனைத்தையும் படைக்கிறவரான (தேவஸ்ய) பகவானுடைய (வரேண்யம்) சிறந்த  (பர்க்க: ) ஜ்யோதிஸ்வரூபத்தை (தீமஹி) த்யானிப்போம். (ஓம்) ஓம்காரமே (ஆப:) ஜலமும் (ஜ்யோதி:) ஒளியும் (ரஜ:) ரஸம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும் (அம்ருதம்) உயிருக்கு ஆதாரமான வாயுவும் (ப்ரஹ்ம) எங்கும் பரந்த ஆகாசமும்.  (பூர்ப்புவஸ்ஸுவ-ரோம்) பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதிகள் குறிப்பிடும் மனம், புத்தி, அஹங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே!

அர்க்யம்முன்போல் ஒரு தடவை. “ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:” என்று ஆத்ம ப்ரதிக்ஷிணமும் பரிஷேசனமும்.

செய்முறை: ப்ராயச்சித்த அர்க்யம் விட்டபின்ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:” என்று தலையைச் சுற்றி பரிஷேசனம் செய்து, நின்றவிடத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள வேண்டும்.

அர்க்யப்ரதானத்தால் அகத்திலுள்ளசத்உருவத்தின் ஜயம் சித்திக்கின்றது.

அடுத்த பகுதியில்ஐக்யாநுஸந்தானம்மற்றும்தேவ தர்ப்பணம்ஆகியவற்றைப் பற்றி பார்க்கலாம்.

No comments:

Post a Comment