பாகம்-19
இப்பகுதியில் திசைகளுக்கான தேவதைகளுக்கு வணக்கம் சொல்லும் “திக்தேவதா-வந்தனம்” பற்றிப் பார்க்கலாம்.
திக்தேவதா-வந்தனம் ||19||
மந்த்ரம்:
ப்ராச்யை திசே நம: | தக்ஷிணாயை திசே நம: | ப்ரதீச்யை திசே நம: | உதீச்யை திசே நம: | ஊர்த்வாய நம: | அதராய நம: | அந்தரிக்ஷாய நம: | பூம்யை நம: | ப்ரஹ்மணே நம: | விஷ்ணவே நம: | ம்ருத்யவே நம: |
அர்த்தம்:
திக்தேவதா வந்தனம் (திக் தேவதைகளின் வந்தனம்):
(ப்ராச்யை திசே நம:) கிழக்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம்.
(தக்ஷிணாயை திசே நம:)
தெற்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம்.
(ப்ரதீச்யை திசே நம:)
மேற்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம்.
(உதீச்யை திசே நம:)
வடக்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம்.
(ஊர்த்வாய நம:)
மேல் உள்ள தேவதைகட்கு நமஸ்காரம்.
(அதராய நம:) கீழ் உள்ள தேவதைகட்கு நமஸ்காரம்.
(அந்தரிக்ஷாய நம:)
இடையிலுள்ள தேவதைகட்கு நமஸ்காரம்.
(பூம்யை நம:) பூதேவிக்கு நமஸ்காரம்.
(ப்ரஹ்மணே நம:)
ப்ரஹ்மாவுக்கு நமஸ்காரம்.
(விஷ்ணவே நம:)
விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.
(ம்ருத்யவே நம:)
ருத்ரனுக்கு நமஸ்காரம்.
செய்முறை:
ஜபம் செய்த திசையிலிருந்து ஆரம்பித்து, வரிசையாக நான்கு திசைகளிலும் மேல் கீழ் திசைகளிலும், இடைவெளியிலும் அஞ்சலி செய்து திக்தேவதைகளையும், பின் பூமியையும் மும்மூர்த்திகளையும் வணங்க வேண்டும்.
அடுத்த பகுதியில் யமதர்மனுக்கு வணக்கம் சொல்லும் “யம வந்தனம்” பற்றிப் பார்க்கலாம்!
No comments:
Post a Comment