Sunday, June 13, 2021

பாகம்-6

இப்பகுதியில் நாம் பார்க்க இருப்பது, “ப்ராசனம்என்னும் மந்த்ரத்தால் ஜபிக்கப்பட்ட தீர்த்தத்தை உட்கொள்ளுதல்:

ப்ராசனம் ||6||

ப்ராத: (காலை வேளையில்):

ஸூர்யச்ச மா மன்யுச்ச மன்யுபதயச்ச மன்யு-க்ருதேப்ய: | பாபேப்யோ ரக்ஷந்தாம் | யத்-ராத்ர்யா பாப-மகார்ஷம் | மனஸா வாசா ஹஸ்தாப்யாம் | பத்ப்யா-முதரேண சிச்நா | ராத்ரிஸ்-ததவலும்பது | யத்கிஞ்ச துரிதம் மயி | இதமஹம் மாமம்ருத-யோநௌ | ஸூர்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா ||

அர்த்தம்:

ப்ராசனம் (மந்த்ரத்தால் ஜபிக்கப்பட்ட தீர்த்தத்தை உட்கொள்ளுதல்)

காலையில்: (ஸூர்யச்ச) அனைத்தையும் இயக்குவிக்கும் ஸூர்யனும் (மன்யுச்ச) அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் (மன்யு-பதயச்ச) கோபத்தையாளும் தெய்வ சக்திகளும் (மன்யு-க்ருதேப்ய:) கோபத்தாற் செய்யப்பட்ட (பாபேப்ய:) பாவங்களினின்று (மா) என்னை (ரக்ஷந்தாம்) காப்பாற்றட்டும். (ராத்ர்யா) இரவில் (மனஸா) மனத்தாலும் (வாசா) வாக்காலும் (ஹஸ்தாப்யாம்) கைகளாலும் (பத்ப்யாம்) கால்களாலும் (உதரேண) வயிற்றாலும் (சிச்நா) ஆண்குறியாலும் (யத்) எந்த (பாபம்) பாவத்தை (அகார்ஷம்) செய்தேனோ, (கிஞ்ச) இன்னும் (மயி) என்னிடத்தில் (யத்) எந்த (துரிதம்) பாவம் உண்டோ, (தத்) அதையும்; (ராத்ரி:) இராத்ரியின் அதிதேவதை (அவலும்பது) நீக்கியருள வேண்டும். (இதம் மாம்) இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை (அஹம்) நான் (அம்ருதயோநௌ) மோக்ஷத்திற்குக் காரணமாகிய (ஸூர்யே ஜ்யோதிஷி) ஸூர்ய வடிவான பரஞ்ஜோதியில் (ஜுஹோமி) ஹோமம் செய்கின்றேன். (ஸ்வாஹா) இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும்.

மத்யாஹ்னே (நடுப்பகலில்): ஆப: புனந்து ப்ருதிவீம் ப்ருதிவீ பூதா புனாது மாம் | புனந்து ப்ரஹ்மணஸ்பதிர்-ப்ரஹ்ம பூதா புனாது மாம் | யதுச்சிஷ்ட-மபோஜ்யம் யத்வாதுச்-சரிதம் மம | ஸர்வம் புனந்து மாமாபோஸதாஞ்ச ப்ரதிக்ரஹ ஸ்வாஹா ||

அர்த்தம்:

மத்யாஹ்னே (நடுப்பகலில்): (ஆப:) ஜலதேவதை (ப்ருதிவீம்) தனக்குறைவிடமாகிய பூமியை (புனந்து) புனிதமாக்கட்டும்; (பூதா) அங்ஙனம் புனிதமாக்கப்பட்ட (ப்ருதிவீ) பூமி, (மாம்) என்னைப் (புனாது) புனிதமாக்கட்டும். (ப்ரஹ்மணஸ்பதி:) அது வேதத்திற்குறைவிடமாகிய ஆசாரியனையும் (புனந்து) புனிதமாக்கட்டும்; (பூதா) என்றும் புனிதமாயுள்ள (ப்ரஹ்ம) வேதம் (மாம்) என்னைப் (புனாது) புனிதமாக்கட்டும். (உச்சிஷ்டம்) பிறர் உண்ட மிச்சமும் (அபோஜ்யம்) புசிக்கத் தகாததுமான (யத்) எது (மயா) என்னால் (புக்தம்) புசிக்கப்பட்டதோ, (வா) அல்லது (மம) என்னுடைய (யத்) எந்த (துச்சரிதம்) துர்நடத்தை உண்டோ, (கிஞ்ச) மேலும்; (அஸதாம்) கெட்டவர்களிடமிருந்து (ப்ரதிக்ரஹம்) ஏற்றுக் கொண்டது எது உண்டோ, (ஸர்வம்) அவை எல்லாவற்றினின்றும் (மாம்) என்னை (புனந்து) ஜலதேவதை புனிதமாக்கட்டும்என்று ப்ரார்த்தித்து (ஸ்வாஹா) புனிதமான என்னைப் பரமாத்ம ஜோதியில் ஹோமம் செய்கின்றேன்.

ஸாயங்காலே (மாலை வேளையில்): அக்நிச்ச மா மன்யுச்ச மன்யுபதயச்ச மன்யு-க்ருதேப்ய: | பாபேப்யோ ரக்ஷந்தாம் | யதஹ்னா பாப-மகார்ஷம் | மனஸா வாசா ஹஸ்தாப்யாம் | பத்ப்யா-முதரேண சிச்நா | அஹஸ்ததவலும்பது | யத் கிஞ்ச துரிதம் மயி | இதமஹம் மாமம்ருத-யோநௌ | ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா ||

அர்த்தம்:

ஸாயங்காலே (மாலை வேளையில்): (அக்நிச்ச) அக்னியும் (மன்யுச்ச) அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும், (மன்யு-க்ருதேப்ய: பாபேப்ய:) கோபத்தாற் செய்யப்பட்ட பாவங்களினின்று (மா) என்னை (ரக்ஷந்தாம்) காப்பாற்றட்டும். (அஹ்நா) பகலில் (மனஸா) மனத்தாலும் (வாசா) வாக்காலும் (ஹஸ்தாப்யாம்) கைகளாலும் (பத்ப்யாம்) கால்களாலும் (உதரேண) வயிற்றாலும் (சிச்நா) ஆண்குறியாலும் (யத்) எந்த (பாபம்) பாவத்தை (அகார்ஷம்) செய்தேனோ, (கிஞ்ச) இன்னும் (மயி) என்னிடத்தில் (யத்) எந்த (துரிதம்) பாவம் உண்டோ, (தத்) அதையும் (அஹ:) பகலின் அதிதேவதை (அவலும்பது) நீக்கியருள வேண்டும். (இதம் மாம்) இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை (அஹம்) நான் (அம்ருதயோநௌ) மோக்ஷத்திற்குக் காரணமாகிய (ஸத்யே ஜ்யோதிஷி) முக்காலத்திலும் ஸத்யமாய் விளங்கும் பரஞ்சோதியில் (ஜுஹோமி) ஹோமம் செய்கின்றேன். (ஸ்வாஹா) இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும்.

ப்ரயோகம் (செய்முறை): உள்ளங்கையில் உளுந்து மூழ்கும் அளவு தீர்த்தத்தை ஏந்தி, மந்த்ரத்தை ஜபித்துப் பின் அதை உட்கொள்க.

முதல் நாள் இரவிலிருந்து அன்றைய நாள் மாலை வரை நாம் எவ்வித பாவச் செயல்களிலும் ஈடுபடாமல் நம்முடைய மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க  ஒரு நாளின் மூன்று வேளைகளிலும் அந்தந்த வேளைக்குரிய, மேற்கண்ட மந்த்ரங்களை ஜபிக்கிறோம். இவற்றை தினந்தோறும் ஜபிக்கின்ற காரணத்தால் எவையெல்லாம் பாவச் செயல்கள் என்பதைப் பகுத்தறியும் அறிவும் நமக்குக் கிட்டும்; நமக்கு பாவம் செய்யும் எண்ணமும் தோன்றாது. இதனால் நம்முள்ளிருக்கும் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே உள்ள தொலைவு வெகுவாகக் குறையும். அதனால் நாம் பரமாத்மாவை விரைவில் அடையும் பாக்யமும் கிட்டும்.

அடுத்த பகுதியில்மீண்டும் ஒருமுறை ஜலதேவதைகளிடம் வைக்கும் கோரிக்கைஎன்னும்புநர்மார்ஜநம்என்ற மந்த்ர ப்ரயோகத்தைப் பற்றிப் பார்க்கலாம். 

 பாகம்-5

 இப்பகுதியில் நாம் பார்க்க இருப்பது, ஜலதேவதைகளிடம் வைக்கின்ற கோரிக்கையான, “மார்ஜனம்என்னும் மந்த்ர ப்ரயோகம்.

மார்ஜனம் ||5||

ஓம் ஸ்ரீகேசவாய நம: ||

1. ஆபோ ஹிஷ்டா மயோ புவ:

2. தா ந ஊர்ஜே ததாதன

3. மஹே ரணாய சக்ஷஸே

4. யோ வ: சிவதமோ ரஸ:

5. தஸ்ய பாஜயதேஹ ந:

6. உசதீரிவ மாதர:

7. தஸ்மா அரம் கமாம வ:

8. யஸ்ய க்ஷயாய ஜின்வத

9. ஆபோ ஜநயதா ச ந:

10. ஓம் பூர்ப்-புவஸ்-ஸுவ: (ஆத்ம பரிஷேசனம்)

 அர்த்தம்:

மார்ஜநம் (ப்ரோக்ஷணத்தால் மந்த்ர-ஸ்நாநம்):

ஓம் ஸ்ரீகேசவாய நம: || ஓம் ஸ்ரீகேசவனுக்கு நமஸ்காரம். (ஆப:) ஜல தேவதைகளாகிய நீங்கள் (மயோ புவ:) உயர்ந்த சுகத்துக்குக் காரணமாக  (ஷ்ட்டா ஹி = ஸ்த்தாஹி) இருக்கிறீர்கள் என்பது ப்ரசித்தம். (தா:) அப்படிப்பட்ட நீங்கள் (:) எங்களுக்கு (மஹே) மஹிமை பொருந்தியதும், (ரணாய) ரமணீயமானதுமான (சக்ஷஸே) ஞானக் கண்ணின் பொருட்டு (ஊர்ஜே) போஷணையை (ததாதன) அளியுங்கள்! (:) உங்களிடம் (:) எந்த (சிவதம:) பரம மங்களமான (ரஸ:) பேரின்ப ரஸம் உள்ளதோ, (தஸ்ய) அதற்கு (இஹ) இங்கேயே (:) எங்களை (உசதீ:) அன்பு சுரக்கும் (மாதர: இவ) தாய்மார்களைப் போல் (பாஜயத) உரியவர்களாக்குங்கள்!  (யஸ்ய க்ஷயாய) எந்த ரஸத்தை நிலையாக வழங்கும் பொருட்டு (ஜின்வத) நீங்கள் இன்ப வடிவாக விளங்குகிறீர்களோ, (தஸ்மை) அந்த ரஸத்திற்காக (:) உங்களை (அரம்) மிகவும் ஆர்வத்துடன் (கமாம) நாடுகின்றோம். (ஆப:) ஜலதேவதைகளாகிய நீங்கள், (:) எங்களை (ஜநயதா) ஞானத்தால் புனிதமான புநர்ஜன்மமடைந்து விளங்கும்படியும் அருள்வீர்களாக!

மார்ஜநம் செய்முறை:

ஓம்என்று பவித்ர விரலால் தீர்த்தத்தில் எழுதி, “ஸ்ரீகேசவாய நம:” என்று உச்சரித்து, புருவ மத்தியில் தொடவும்.

முதல் ஏழு மந்த்ரங்களால் ஸிரஸில் பவித்ர விரலால் ப்ரோக்ஷித்துக் கொண்டு, எட்டாவதால் பாதங்களைத் தொட்டு, ஒன்பதாவதால் மறுபடியும் ஸிரஸில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். பின், “ஓம் பூர்ப்-புவஸ்-ஸுவ:” என்று தலையைச் சுற்றி பரிஷேசனம் செய்ய வேண்டும்.

நதியில் நின்றுகொண்டு செய்தால், இடதுகையால் ஜலத்தைத் தொட்டுக் கொண்டு வலதால் ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

ஓம்கார வடிவான ஸ்ரீ கேசவனுக்கு நமஸ்காரம். ஜல தேவதைகளாகிய நீங்கள், உயர்ந்த சுகத்துக்குக் காரணமாக இருக்கிறீர்கள் என்பது ப்ரசித்தம். அப்படிப்பட்ட நீங்கள், எங்களுக்கு மஹிமை பொருந்தியதும், ரமணீயமானதுமான ஞானக் கண்ணின் பொருட்டு போஷணையை அளியுங்கள்! உங்களிடம் எந்த பரம மங்களமான பேரின்ப ரஸம் உள்ளதோ, அதற்கு இங்கேயே எங்களை அன்பு சுரக்கும் தாய்மார்களைப் போல் உரியவர்களாக்குங்கள்! எந்த ரஸத்தை நிலையாக வழங்கும் பொருட்டு நீங்கள் இன்ப வடிவாக விளங்குகிறீர்களோ, அந்த ரஸத்திற்காக உங்களை மிகவும் ஆர்வத்துடன் நாடுகின்றோம். ஜலதேவதைகளாகிய நீங்கள், எங்களை ஞானத்தால் புனிதமான புநர்ஜன்மமடைந்து விளங்கும்படியும் அருள்வீர்களாக!

ஒருவருடைய மனதில் அன்பு ஊற்று சுரந்தால், அதனால் அவருக்கும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பேரின்பம் கிட்டும். ஸந்த்யாவந்தனம் செய்யும் ஒருவர் மனதில் அவ்வாறு அன்பு சுரக்க வேண்டுமென்பதற்காக, ஜலதேவதைகளை வேண்டுவதாக ஒரு ஏற்பாட்டை நம் முன்னோர்கள் செய்து வைத்துள்ளனர். இந்த மந்த்ரத்தை த்ரிகாலமும் அக்காலத்தில் ஜபித்து வந்த காரணத்தால்தான் ப்ராஹ்மணர்கள் இன்னா செய்தலுக்குப் பெரிதும் அஞ்சினர். மேலும் வள்ளுவர் சொன்னஇன்னா செய்தாரை ஒறுத்தல், அவர்நாண நன்னயம் செய்து விடல்என்னும் குறளின் பொருள் இம்மந்த்ரத்தில் பொதிந்துள்ளதும் நமக்கு விளங்கும்! இதன் காரணமாகவே ப்ராஹ்மணர்கள் இக்காலத்திலும் தமக்கு இன்னா செய்யும் பிறர்க்கு, அவர்கள் செய்ததைத் திருப்பிச் செய்வதில்லை! அவர்களைத் தீயவழியில் செல்லாது தடுக்கும் வல்லமை இம்மந்த்ரத்திற்கு உண்டென்றால் அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை! இம்மந்த்ரத்தைப் படிக்கும்போது எனக்கு நான் சிறுவனாக இருந்தபோது வானொலியில் கேட்ட பாடலின் முதல் வரிகள் நினைவுக்கு வருகிறது. “மரமலர் பூத்தால் வண்டு வரும்; நம் மனமலர் பூத்தால் அன்பு வரும்”! வள்ளுவரின் மற்றுமிரு குறள்களும் நினைவுக்கு வருகின்றன. “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்”. “அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு”.

அடுத்த பகுதியில், “ப்ராசனம்என்னும் மந்த்ரத்தால் ஜபிக்கப்பட்ட தீர்த்தத்தை உட்கொள்ளுதல் பற்றிப் பார்க்கலாம்.

பாகம்-4

ஸங்கல்ப: ||4||

மமோபாத்த-ஸமஸ்த-துரித-க்ஷய-த்வாரா ஸ்ரீபரமேஸ்வர-ப்ரீத்யர்த்தம்1 ப்ராத: ஸந்த்யா-முபாஸிஷ்யே || (மாத்யான்ஹிகம் கரிஷ்யே ||  ஸாயம் ஸந்த்யா-முபாஸிஷ்யே || )

 (1ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்ஸ்ரீ பகவதாஜ்ஞயா, பகவத் ப்ரீத்யர்த்தம்)

மந்த்ரத்தின் அர்த்தம்:

ஸங்கல்பம் (தெளிந்த தீர்மானம்) : (மம உபாத்த) என்னால் அடையப்பட்ட (ஸமஸ்த-துரித) எல்லாப் பாவங்களையும் (க்ஷயத்வாரா) நசிக்கச் செய்வதின் மூலம் (பரமேஸ்வர-ப்ரீத்யர்த்தம்) பகவானுடைய அருளுக்குப் பாத்திரமாகும் பொருட்டு (ப்ராத:) காலையில் (ஸந்த்யாம்) ஸந்த்யாதேவியை (உபாஸிஷ்யே) வழிபட ஆரம்பிக்கின்றேன்.

(மாத்யான்ஹிகம்) உச்சி வேளையில் (கரிஷ்யே) செய்கிறேன்.

(ஸாயம்) அந்திப் பொழுதில் (ஸந்த்யாம்) ஸந்த்யாதேவியை (உபாஸிஷ்யே) வழிபட ஆரம்பிக்கின்றேன்.

ப்ராணாயாமத்திற்குப் பின் ஸங்கல்பம் செய்த பின்புதான் எச்செயலையும் ஆரம்பிக்க வேண்டும். ஸங்கல்பத்திற்கு, வலது தொடை மீது இடது கை கீழும், வலது கை அதன் மேலுமாக (இடது உள்ளங்கை மீது வலது உள்ளங்கை உள்ளவாறு) வைத்துக் கொள்ளவும்.

 ஏன் ஸங்கல்பம் செய்கிறோம்?

 ஸங்கல்பம் (தீர்மானம்) மனதிலும் பெரிது. எப்போது ஒருவன் ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு ஸங்கல்பிக்கிறானோ (தீர்மானம் செய்கிறானோ), அப்போது தெளிவுற யோசித்துத் தீர்மானிக்கிறான். தீர்மானத்தைப் பேச ஆரம்பிக்கிறான். பேச்சு, பெயர் வடிவமாகிறது. பெயர் வடிவில் மந்த்ரங்கள் ஒடுங்குகின்றன. மந்த்ரங்களில் கர்மங்கள் (செயல்கள்) ஒடுங்குகின்றன.

 இதையே வள்ளுவர், “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர், எண்ணியர் திண்ணியராகப் பெறின்என்றும், “எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்குஎன்றும் ஸங்கல்பத்தின் (தீர்மானத்தின்) சிறப்பைக் கூறுகிறார்.

 ஒருவர், தான் செய்து முடிக்க எண்ணும் செயலை தானே நேரடியாகச் செய்வாரெனின், பலன் எண்ணியவாறு, விரைவில் கிட்டும். அதே செயலைப் பிறரைக் கொண்டு முடிக்க எண்ணுவாரேயானால், அவர் எவரிடம்/எவர்களிடம் செயலை ஒப்படைத்தாரோ, அவர்/அவர்கள் தான் எண்ணியவாறு அச்செயலை முடிக்கின்றாரா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கவில்லையெனில், தீர்மானம் தோல்வியில் முடியும். உதாரணம் 8, நவம்பர் 2016!

 அடுத்த பகுதியில் ஜலதேவதைகளிடம் வைக்கின்ற கோரிக்கையான, “மார்ஜனம்என்னும் மந்த்ர ப்ரயோகம் குறித்துப் பார்க்கலாம்.