எழுதிய நாள்: 16-08-2021
கனவிலே எழுதி மடித்த கவிதை
பாடல் : ராமனின் கால்தடமே
ராகம் : ஸாமா / ஸஹானா
தாளம் : ஆதி
இயற்றியவர் : கனவுப் புலவன்
பல்லவி
ராமனின் கால்தடமே சீதையின் வழித்தடமே
இருவரின் வழித்தடமே மானிடர்க்குப் பாடமே
அநுபல்லவி
கானவழி நதியின் வழி சோலைவழி நடந்தனரே
ராமனவன் நடந்த வழி மனிதர்க்கு சிறந்த வழி
(ராமனின் கால்தடமே)
சரணம்
பொய்மழுவை மெய்யெனவே
சீதை வழி பிறழ்ந்தனளே
சீதை சொன்ன வழி நடந்த
ராமனுக்குத் துன்பவழி
ஏதுவழி யெனமயங்கும்
மானிடர்க்கு சிறந்த வழி
ராமனவன் சொந்த வழி
மனிதர்க்கு சிறந்த வழி
(ராமனின் கால்தடமே)
No comments:
Post a Comment