#கனவிலே_எழுதி_மடித்த_கவிதை
பாடல்: ஸீதா கல்யாண வைபோகமே
ராகம்: குறிஞ்சி
பல்லவி
ஸீதா கல்யாண வைபோகமே
ராம கல்யாண வைபோகமே
அநுபல்லவி
மனதுக்கு மகிழ்ச்சி தரும் வைபோகமே
காண்பவர் அனைவருக்கும் பெரும் யோகமே! (ஸீதா கல்யாண)
சரணம் 1
மாதர் மாடந்தனில் ஜானகி இருக்க
மாடவீதியில் ஸ்ரீராமன் நடக்க
நான்கு விழிகளும் விரும்பியே கலக்க
இதயமிரண்டும் இடம் மாறி புகுந்திருக்க
(ஸீதா கல்யாண வைபோகமே)
சரணம் 2
சுயம்வர அரங்கம் சிறந்திருக்க
பல தேசத்து மன்னர்கள் நிறைந்திருக்க
இரண்டு மனங்கள் மட்டும் கலந்திருக்க
ஸ்ரீராமன் சுயம்வரம் வென்றெடுக்க
(ஸீதா கல்யாண வைபோகமே)
சரணம் 3
மிதிலை மகிழ்ச்சியில் மிதந்திருக்க
தசரதன் உறவொடு குவிந்திருக்க
விண்ணவர் யாவரும் அருளியிருக்க
ஸீதா ராமன் கைத்தலம் பிடித்திருக்க
(ஸீதா கல்யாண வைபோகமே)
No comments:
Post a Comment