#கனவிலே_எழுதி_மடித்த_கவிதை
பாடல்: கோடை எரிக்கின்றதே!
ராகம்: ஶுத்த ஸீமந்திநி
தாளம்: ஆதி
பல்லவி
கோடை எரிக்கின்றதே என்னை
கோடை எரிக்கின்றதே என்னை
கோடை எரிக்கின்றதே என்
ஊழ்வினையின் பாவங்களென்னும்
கோடை எரிக்கின்றதே!
அனுபல்லவி
இளைப்பாறுதல் தேடி அலைகிறேன் நானும்
ராம! நீ தருநிழலாய் வந்திட வேணும்!
(கோடை எரிக்கின்றதே)
சரணம் 1
பாலை நண்பகலில் பயணமென் வாழ்க்கை
ஆதரவேதுமின்றி உழலுதென் யாக்கை
பாலை நண்பகலில் பயணமென் வாழ்க்கை
ஆதரவின்றி உழலுதென் யாக்கை
சோலையென நீ வருவாயோ ராமா!
ஆதரவெனக்கு தருவாயோ ராமா
(கோடை எரிக்கின்றதே)
சரணம் 2
பாதுகையின்றி அன்று வனங்களில்
எத்தனை கோடைகள் கடந்தனை ராமா!
பாதுகையின்றி அன்று வனங்களில்
எத்தனை கோடைகள் கடந்தனை ராமா
பாதுகையாயுனக்கு நான் வரவில்லை
பாதுகையாயுனக்கு நான் வரவில்லை
எத்துணை பாவி நான் ராமா!
எத்துணை பாவி நான் ராமா அதனால்
(கோடை எரிக்கின்றதே)
No comments:
Post a Comment