10-06-2023 அன்று கனவிலே எழுதி மடித்த கவிதை:
ஆனந்தக் கடலானை அருள்பொங்கும் விழியானை
பாரந்தச் சடையானை மீண்டும் நம்மைப் படையானை. (ஆனந்தக்)
1)
பனிமழை பொழியும் கைலாஸத்தில்
பார்வதி கணபதி சரவணனோடு
அருள்மழை பொழியும் அம்பலவாணன்
தருணம் அறிந்து காக்கும் அந்த (ஆனந்தக் கடலானை)
2)
நந்தியின் மத்தளம் வாணியின் வீணை
ரிஷிகளின் வேதம் எங்கும் சூழ
மங்கல நாயகன் சுந்தரமூர்த்தி
எங்கும் நிறைந்த இறையாம் அந்த (ஆனந்தக் கடலானை)
3)
ஆலயம் மனதில் அமைத்தவர்க்கும்
காலால் கண்ணை இருத்தியவர்க்கும்
சாலப் பரிந்து அருளிய எந்தை
நாதன் நாமம் நம: ஶிவாயவே (ஆனந்தக் கடலானை)
4)
மூன்று விழிகள் உடையானை அந்த
மூன்று புரங்கள் எரித்தானை நம்
மூன்று மலங்கள் அழிப்போனை நாம்
மூன்று வேளையும் வணங்கிடுவோமே
(ஆனந்தக் கடலானை)
5)
ஹர ஹர ஶங்கர ஜெய ஜெய ஶங்கர
ஹர ஹர ஶங்கர ஜெய ஜெய ஶங்கர
ஹர ஹர ஶங்கர ஜெய ஜெய ஶங்கர
ஹர ஹர ஶங்கர ஜெய ஜெயஶங்கர
(ஆனந்தக் கடலானை)
ஓம் நம: ஶிவாய ஓம் ஓம் நம: ஶிவாய ஓம்
ஓம் நம: ஶிவாய ஓம் ஓம் நம: ஶிவாய ஓம்
ஓம் நம: ஶிவாய ஓம் ஓம் நம: ஶிவாய ஓம்
ஓம் நம: ஶிவாய ஓம் ஓம் நம: ஶிவாய ஓம்!
(இதன் ஆரம்பம் முதல் கடைசி வரை பின்னணியில் உடுக்கை தீம் ததீம் தகிட தகதிமி தகதிமி என்று தொடர்ந்து ஒலிக்கும்!)
No comments:
Post a Comment