எழுதிய நாள்: 20-04-2023
கனவிலே எழுதி மடித்த கவிதை
பாடல்: கண்ணன் கைக்குழல்
ராகம்: பீம்ப்ளாஸ்
பல்லவி
கண்ணன்கை குழலாவேனோ
அவன் இதழ்வழி வரும் காற்றை
விரும்பி நான் ஸ்வாஸிக்க (கண்ணன்)
அனுபல்லவி
அவன் கைவிரல் ஆவேனோ
அவன் கைவிரல் ஆவேனோ
அழகு பதங்களிலே என்னையவன் அமைக்க (கண்ணன்)
சரணம் -1
மின்னுமவன் இடையில்
உடையென ஆவேனோ
மின்னுமவன் இடையில்
உடையென ஆவேனோ
என்றுமவன் திருமேனி
இறுக அணைத்திருக்க (கண்ணன்)
சரணம் -2
அவன் கனியிதழாவேனோ
அவன் கனியிதழாவேனோ
இந்த அகிலத்து மங்கையரை
அம்மாவென நான் அழைக்க (கண்ணன்)
சரணம் -3
சங்கென ஆவேனோ அவன் புகழ் முழங்க
சக்கரமாவேனோ அவன் ஏவல் பணிபுரிய
மந்திரமாவேனோ அவன் புகழைப் பாட
வெண்ணெய் ஆவேனோ
உருகியவனில் கரைய (கண்ணன்)
No comments:
Post a Comment