Monday, December 2, 2024

கண்ணன் கைக்குழல் ஆவேனோ

எழுதிய நாள்: 20-04-2023

கனவிலே எழுதி மடித்த கவிதை


பாடல்: கண்ணன் கைக்குழல்

ராகம்: பீம்ப்ளாஸ்


பல்லவி

கண்ணன்கை குழலாவேனோ

அவன் இதழ்வழி வரும் காற்றை

விரும்பி நான் ஸ்வாஸிக்க (கண்ணன்)


அனுபல்லவி

அவன் கைவிரல் ஆவேனோ

அவன் கைவிரல் ஆவேனோ

அழகு பதங்களிலே என்னையவன் அமைக்க (கண்ணன்)


சரணம் -1

மின்னுமவன் இடையில்

உடையென ஆவேனோ

மின்னுமவன் இடையில்

உடையென ஆவேனோ

என்றுமவன் திருமேனி

இறுக அணைத்திருக்க (கண்ணன்)


சரணம் -2

அவன் கனியிதழாவேனோ

அவன் கனியிதழாவேனோ

இந்த அகிலத்து மங்கையரை

அம்மாவென நான் அழைக்க (கண்ணன்)


சரணம் -3

சங்கென ஆவேனோ அவன் புகழ் முழங்க

சக்கரமாவேனோ அவன் ஏவல் பணிபுரிய

மந்திரமாவேனோ அவன் புகழைப் பாட

வெண்ணெய் ஆவேனோ

உருகியவனில் கரைய (கண்ணன்)

No comments:

Post a Comment