எழுதிய நாள்: 02-03-2023
கனவிலே எழுதி மடித்த கவிதை
பாடல்: ராம மந்த்ரமே
ராகம்: ஸஹானா
தாளம்: ஆதி
பாடல் வரிகள்: கனவுப் புலவன்
பல்லவி
ராம மந்த்ரமே மனதுக்கு இதமே
நாளும் சொல் மனமே!
ஸ்ரீராம மந்த்ரமே மனதுக்கு இதமே
அதை நாளும் சொல் மனமே!
அனுபல்லவி
வேதம் நான்கினும் சிறந்த மந்த்ரமே
நாதனவன் ஸ்ரீராம மந்த்ரமே! (ராம மந்த்ரமே)
சரணம்
ஏதுகுறை நமக்கு தாஶரதி இருக்க
ஸ்ரீராம மந்த்ரம் நாவில் இனித்திருக்க
ஓடும் நம் வினைகள் ஓர் முறை உரைக்க
கோடி பதிமூன்றவன் தரிசனம் கிடைக்க
ராம மந்த்ரமே மனதுக்கு இதமே
நாளும் சொல் மனமே!
ராம்....... ராம்....... ராம்!
No comments:
Post a Comment