Monday, May 28, 2018

ஸந்த்யாவந்தனம் மந்த்ரங்கள் - அர்த்தத்துடன்

ஸந்த்யாவந்தன மந்த்ரங்கள்
(அர்த்தத்துடன்)

ப்ரஹ்மா, அவர் செய்த த்யானத்தின் முதிர்ந்த பயனாகத் தோன்றிய பரதேவதைக்குப் பெயர்ஸந்த்யா”! அவளை ஹ்ருதய ஆகாசத்திலும், பேராகாசத்திலும் அன்றாடம் உதித்து அஸ்தமிக்கும் ஸூர்யனிடத்திலும் வந்தனம் செய்தலே ஸந்த்யாவந்தனம். இதை ஸம்ஸ்க்ருதத்தில் இவ்வாறு சொல்லியிருக்கின்றனர்:

ब्रह्मणो द्यायतो यस्मात् सम्यक् जाता वराङ्गना ।
अतः सन्ध्येति लोकेऽस्मिन् अस्याः क्यातिर्भविष्यति ॥

ப்ரஹ்மணோ த்யாயதோ யஸ்மாத் ஸம்யக் ஜாதா வராங்கனா |
அத: ஸந்த்யேதி லோகேஸ்மின் அஸ்யா: க்யாதிர் பவிஷ்யதி ||

மும்மூர்த்திகளின் முழுச் சக்தியும் திரண்ட வடிவாய் நின்று அனைத்து உலகங்களையும் தோற்றுவித்து, ஆட்டுவிப்பதாக இருந்தாலும், மாயைக்கப்பால் நிஷ்கலமாக இருக்கின்ற எந்த பரதத்துவமுண்டோ, அதற்குஸந்த்யாஎன்று பெயர்.

நாம் அனைவரும் தினந்தோறும் ஸந்த்யாதேவியை உபாஸிக்க வேண்டும். உதிக்கும்போதும், அஸ்தமிக்கும்போதும் ஸூர்யனைஇவனே ப்ரஹ்மம்என்று த்யானம் செய்யும் வித்வானாகிய ப்ராஹ்மணன் எல்லா நன்மைகளையும் அடைகிறான்.

ஸந்த்யாவந்தனம் செய்யாதவன் எப்போதும் அசுத்தமானவன். எக்கருமத்திற்கும் தகுதியற்றவன். (ஸந்த்யாஹீநோசுசிர் நித்யம் அனர்ஹ: ஸர்வகர்மஸு). பிறப்பு மற்றும் இறப்புகளால் உண்டாகும் தீட்டு காலங்களிலும் ப்ராஹ்மணன் ப்ராணாயாமமின்றி மனத்தால் மந்த்ரங்களை உச்சரித்து, ஸந்த்யாவந்தனத்தை விட்டு விடாமல் செய்ய வேண்டும்.

ஸந்த்யாகாலத்தில் தூங்குவதோ, சாப்பிடுவதோ, படிப்பதோ கூடாது.


பாகம்-1

இனி, ஸந்த்யாவந்தனத்தின் பூர்வ பாக: இதில் நாம் முதலில் காண இருப்பது, “ஆசமநீயம்

ஆசமநம் ||1||
அச்யுதாய நம: (அச்சுதனுக்கு நமஸ்காரம்)
அநந்தாய நம: (அநந்தனுக்கு நமஸ்காரம்)
கோவிந்தாய நம: (கோவிந்தனுக்கு நமஸ்காரம்)

இனி, விஷ்ணுவின் பன்னிரு திருநாமங்களால் நம் உடலின் இந்த்ரியங்களனைத்துக்கும் ரக்ஷை இடுதல்:

கேசவ, நாராயணகட்டைவிரல், வாய் இவ்விரண்டும் அக்நியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, கட்டை விரலால் வலது இடது கன்னங்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

மாதவ, கோவிந்தபவித்ர விரல் (மோதிர விரல்), கண்கள் இவ்விரண்டும் ஸூர்யனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, பவித்ர விரலால் நமது இரு கண்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

விஷ்ணோ, மதுஸூதநஆள்காட்டி விரல், நாசி இவ்விரண்டும் வாயுவின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, ஆள்காட்டி விரலால் நாசியின் இருபுறங்களிலும் (பெண்கள் மூக்குத்தி போட்டுக் கொள்ளுமிடங்கள்) ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

த்ரிவிக்ரம, வாமநசுண்டுவிரல், காதுகள் இவ்விரண்டும் இந்த்ரனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, சுண்டுவிரலால் வலது இடது காதுகளை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீதரஹ்ருஷீகேசநடுவிரல், தோள்கள் இவ்விரண்டும் ப்ரஜாபதியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, நடுவிரலால் வலது இடது தோள்களை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

பத்மநாப, தாமோதரஉள்ளங்கை, ஹ்ருதயம் மற்றும் உச்சந்தலை இவை இறைவன் உறையுமிடங்கள். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, உள்ளங்கையால் ஹ்ருதயத்தையும் உச்சந்தலையையும் ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த ஆசமநீய மந்த்ரங்களின் அர்த்தத்தை முழுமையாக இவ்வாறு உரைக்கிறேன்:
அச்சுதனுக்கு நமஸ்காரம்; அநந்தனுக்கு நமஸ்காரம்; கோவிந்தனுக்கு நமஸ்காரம்.
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ, மதுஸூதனா, த்ரிவிக்ரமா, வாமநா, ஸ்ரீதரா, ஹ்ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா! உன்னைப் பன்னிரு திருநாமங்களால் போற்றி, என் இந்த்ரியங்களுக்கு ரக்ஷை இடுகின்றேன்!

இந்த ஆசமநீயத்தைச் செய்வதன் மூலம் நமக்கு ஒரு உண்மை புலப்படும். பன்னிரு திருநாமங்களைச் சொல்லி, நமது இந்த்ரியங்களுக்கு ரக்ஷை எதற்காக இடுகிறோம், எந்தெந்த இந்த்ரியத்தில் எந்த அதிதேவதை குடிகொண்டிருக்கிறது என்பதை நாம் மேலே பார்த்தோமல்லவா?

இதன் மூலம், இறைவனின் ஒவ்வொரு வடிவமும், அதிதேவதைகளும் நமது உடலிலேயே உள்ளனர் என்பது நமக்குப் புலப்படுகிறது. சித்தர்கள், யோகிகள், மஹான்கள் இவர்களெல்லாம், “நான் கடவுள்என்ற பொருள்படும்படி, “அஹம் ப்ரஹ்மாஸ்மிஎன்று ஏன் கூறுகின்றனர் என்பதற்கான காரணம் ஆசமநீயம் செய்தபின் நமக்குப் புரியும்! இந்த, “கடவுள்என்ற சொல்லையே நாம் இரண்டாகப் பிரித்துப் பொருள் காண வேண்டும். அதாவது, “கட”, “உள்என்று பிரிக்க வேண்டும். இங்கே, “உள்என்பதற்கு நம்முடையமனம்என்று பொருள்படும். நம்முடைய மனதை நாம் கடக்க வேண்டும். நம்முடைய சட்டைப் பையில் ரூ.2000 உள்ளது. அது சட்டைப் பையில் உள்ளபோது நம்முடைய கண்களுக்குத் தெரியாது. ஆனால், நம்முடைய மனதிற்கு? நம்மிடம் ரூ.2000 உள்ளது என்ற உணர்வு இருக்குமல்லவா? அவ்வாறு இருப்பதை நாம் எவ்வாறு உறுதி செய்வோம்? சட்டைப் பையிலிருந்து அதைக் கடத்தி, அதை மேசை மேல் வைத்துப் பார்க்கிறோமல்லவா? அதைப் போலவே, நம்முள்ளிருக்கும் கடவுளை நமக்குத் தெரியாது! அக்கடவுளைக் காண வேண்டுமெனில், நம்முடைய மனக்கண்களால் நம்முடைய மனதை ஒரு மேசை மேல் கிடத்தி, அறிவுக்கண்களால் அந்த மனதைப் பார்த்தால், அம்மனத்துள் அடங்கியிருக்கும் நல்ல மற்றும் தீய எண்ணங்களை நம்மால் உணர்ந்து, பட்டியலிட முடியும். நம்முள் இருக்கும் கடவுளைக் காண, அறிவுக்கண்களால் நாம் கண்டறிந்த நல்ல எண்ணங்கள் மற்றும் குணங்களை மேலும் மேம்படுத்த, நம் அறிவின் துணைகொண்டு உறுதியேற்க வேண்டும். அதைப் போலவே, நம் மனத்துள்ளிருக்கும் தீய எண்ணங்கள் மற்றும் குணங்களை நம் அறிவின் துணைகொண்டு விலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது ஆன்மா மேம்படும். நம்முள் உறைந்திருக்கும் இறைவடிவங்கள் மற்றும் அதிதேவதைகள் செயல்பட ஆரம்பிப்பார்கள்! பிறகென்ன? அதன்பின் நம்மை எவராலும் தீயவழிகளில் செலுத்த முடியாது! நம்மை பாதிப்பவர்களை நாமும் எளிதில் வெல்லலாம்!

என்ன, நாம் நம்முள்ளிருக்கும் இறைசக்திகளை உணர்ந்து, நாமும்அஹம் ப்ரஹ்மாஸ்மிஎன்று நம்மைச் சொல்லிக் கொள்ள நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள, செயலில் இறங்கலாமா?

Thursday, March 22, 2012

பாடல் 5) மாயனை மன்னு

பாடல் 5) மாயனை மன்னு

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்: உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. “ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

பாடல் 4) ஆழி மழைக்கண்ணா!

பாடல் 4) ஆழி மழைக்கண்ணா!

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

ஓங்கி உலகளந்த

பாடல் 3) ஓங்கி உலகளந்த

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம். இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்.

விளக்கம்: ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாகிய திருமாலை வணங்கினால், என்னென்ன கிடைக்கும் என்பதை ஆண்டாள் பட்டியல் இடுகிறாள். இங்கே தனது தேசப்பற்றை வெளியிடுகிறாள். தங்கள் ஊர் மட்டுமின்றி தேசமே செழிக்க மார்கழி நோன்பு வகை செய்யும் என்று கருத்து தெரிவிக்கிறாள். நாமும், உலக நன்மைக்காக திருமாலிடம் மன்றாடுவோமே!

திருப்பாவை பாடல்கள்

பாடல் 2) வையத்து வாழ்வீர்காள்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தாமனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவை நோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்: விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்.

திருப்பாவை பாடல்கள்

பாடல் 2) வையத்து வாழ்வீர்காள்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தாமனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவை நோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்: விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்.

திருப்பாவை பாடல்கள்

திருப்பாவை

பாடல் 1) மார்கழித் திங்கள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் “நாராயணனே பறை தருவான்” என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.